search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடுக்குமாடி குடியிருப்பு"

    • உப்பனாரு வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்தது.
    • வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குப்பட்ட உப்பனாரு வாய்க்காலில் புதிதாக கட்டப்பட்ட 3 அடுக்குமாடி வீடு சரிந்து துண்டாக விழுந்து விபத்துக்குள்ளானது.

    உப்பனாரு வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது அடுக்குமாடி வீடு சரிந்து விழுந்துள்ளது.

    இந்த வீடு புதுமனை புகுவிழா நடைபெற இருந்த நிலையில் சரிந்து விழுந்தது. வரும் பிப்ரவரி 1ம் தேதி வீட்டின் கிரக பிரவேசம் நடைபெற இருந்தது.

    வீட்டில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஷார்க் சர்க்யூட் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
    • தீ பரவ தொடங்குவதற்கு முன்னதாக கட்டிடத்தில் உள்ள பொதுமக்களை மீட்பு குழுவினர் பத்திரமாக வெளியேற்றினர்.

    மும்பை அருகே தானே டோம்பிவலியில் உள்ள காசா அரேலியா கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    கட்டிடங்கள் முழுவதும் தீ பரவ தொடங்குவதற்கு முன்னதாகவே கட்டிடத்தில் உள்ள பொதுமக்களை மீட்பு குழுவினர் பத்திரமாக வெளியேற்றினர். பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், தீயை அணைக்கும் முயற்சியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லோதா குடியிருப்பு வளாகத்தில் உள்ள காசா அரேலியா கட்டிடத்தின் 11 வது மாடியில் இருந்து ஷார்ச் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கட்டிடத்தின் 11 வது தளத்தில் ஏற்பட்ட தீ, 18 வது மாடி வரை பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்

    • 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி வீடு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
    • ரூ. 3.08 லட்சத்தை பயனாளிகள் பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

    திருப்பூர்,அக்.24-

    தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திருப்பூா் கோட்டம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் ஊராட்சி கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரும்பாளி கிராமத்தில் உயா்தொழில்நுட்ப ஜவுளி பூங்கா அருகே, 8 தளங்களுடன், 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி வீடு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு பயனாளிகள் தோ்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ. 3.08 லட்சத்தை பயனாளிகள் பங்களிப்பு தொகையாக செலுத்த வேண்டும்.

    பயனாளிகள் திருமணமானவராகவும், நகராட்சி பகுதிக்குள் வசிப்பவராகவும், ஆண்டு வருமானம், ரூ.3 லட்சத்துக்குள்ளும் இருக்க வேண்டும். பயனாளி மற்றும் குடும்ப உறுப்பினருக்கு சொந்த வீடு, வீட்டுமனை இருக்கக் கூடாது. குடும்பத் தலைவா் மற்றும் உறுப்பினா்களின் ஆதாா் அட்டை, பயனாளியின் புகைப்படம், ரேஷன் காா்டு நகல், வாக்காளா் அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் நவம்பா் 10-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும், இது குறித்து தொடா்புக்கு 9626727628 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது

    • தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
    • அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சென்னையில் 9 இடங்களில் 3,238 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.

    அதன்படி நாவலர் நெடுஞ்செழியன் நகர் மற்றும் சிந்தாதிரிப்பேட்டை திட்டப்பகுதியில் ரூ75.95 கோடி மதிப்பீட்டில் 450 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பெரியார் நகர் திட்டப்பகுதியில் ரூ.81.64 கோடி மதிப்பீட்டில் 448 புதிய குடியிருப்புகள், காந்தி நகர் திட்டப்பகுதியில் ரூ.83.50 கோடி மதிப்பீட்டில் 500 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், வேம்புலியம்மன் திட்டப்பகுதியில் ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் 188 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், பத்ரிக்கரை திட்டப்பகுதியில் ரூ.32.30 கோடி மதிப்பீட்டில் 168 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், கங்கைகரைபுரம் திட்டப்பகுதியில் ரூ.29.85 கோடி மதிப்பீட்டில் 170 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், ஆண்டி மான்யம் தோட்டம் திட்டப் பகுதியில் ரூ118.53 கோடி மதிப்பீட்டில் 702 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், நாட்டான் தோட்டம் திட்டப்பகுதியில் ரூ.41.08 கோடி மதிப்பீட்டில் 252 புதிய அடுக்குமாடி குடியி ருப்புகள் மற்றும் பருவா நகர் திட்டப்பகுதியில் ரூ.61.13 கோடி மதிப்பீட்டில் 360 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என ரூ.556.60 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 3,238 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் குறு சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு செயலாளர் அபூர்வா, வாரிய மேலாண்மை இயக்குனர் பொ. சங்கர், மாநகராட்சி பணிகள் குழு தலைவர் நே.சிற்றரசு, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • தமிழக அரசின் புதிய உத்தரவின்படி அடுக்குமாடி குடியிருப்பின் மொத்த விலையில் 9 சதவீத தனிப்பதிவு கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டும்.
    • விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைத்து சார் பதிவாளர்களுக்கு வழங்குமாறு பத்திரப்பதிவு துறை தலைவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

    சென்னை:

    அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 9 சதவீத தனிப்பதிவு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள பதிவு கட்டணத்துடன் இந்த புதிய கட்டண விகிதம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

    இதனால் தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை உயர வாய்ப்புள்ளது. உதாரணத்துக்கு ரூ.50 லட்சத்துக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும் நிலையில் விற்பனை பத்திரத்துக்காக நிர்ணயிக்கப்படும் கட்டணத்தில் 9 சதவீதம் மற்றும் கட்டுமான கட்டணமாக 4 சதவீதம் என தோராயமாக ரூ.2.35 லட்சம் செலுத்தினால் போதுமானதாக இருந்தது.

    தமிழக அரசின் புதிய உத்தரவின்படி அடுக்குமாடி குடியிருப்பின் மொத்த விலையில் 9 சதவீத தனிப்பதிவு கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது ரூ.50லட்சம் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்புக்கு 4.5 லட்சம் அளவுக்கு தனி பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

    அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சரியான முறையில் கட்டணத்தை வசூலிக்கவும், முறைகேட்டை தடுக்கவும் இத்தகைய தனிப்பதிவுக் கட்டணம் விதிக்கப்படுவதாக வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைத்து சார் பதிவாளர்களுக்கு வழங்குமாறு பத்திரப்பதிவு துறை தலைவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

    • கடந்த 2019-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த குடியிருப்பு 3 பிளாக்குகளை கொண்டதாகும்.
    • கடந்த 2021-ம் ஆண்டு இந்த குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    அம்பத்தூர்:

    கொரட்டூர் போலீஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன.

    கடந்த 2019-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த குடியிருப்பு 3 பிளாக்குகளை கொண்டதாகும். இங்கு 1000-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். குடியிருப்பு மொத்தம் 9 தளங்களை கொண்டதாகும்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணி அளவில் 2 பிளாக்குகளில் 8-வது தளத்தில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகளில் வசித்தவர்கள் தூக்கத்தில் இருந்து அலறியடித்துக் கொண்டு எழும்பினார்கள். தங்களது குழந்தைகள் வீட்டில் இருந்த பெரியவர்களை அழைத்துக் கொண்டு அவசரம் அவசரமாக கீழே இறங்கினர்.

    பின்னர் ஒலி பெருக்கி மூலமாக அறிவித்து 8 மாடியில் வசித்த மற்றவர்களையும் கீழே இறங்கி வருமாறு தெரிவித்தனர்.

    இதனால் சுமார் 500-க் கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் நள்ளிரவில் தங்களது வீடுகளை விட்டு கீழே இறங்கி சாலையில் திரண்டனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று அதிர்வு ஏற்பட்டதாக கூறப்பட்ட கட்டிடத்தில் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக வானிலை மற்றும் அது தொடர்பான அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

    இதில் நிலநடுக்கம் போன்று எதுவும் ஏற்படவில்லை என்பது உறுதியானது. இதன் பிறகே சாலையில் திரண்டு நின்ற குடியிருப்பு வாசிகள் அதிகாலை 5 மணிக்கு பிறகே தங்களது வீடுகளுக்கு சென்றனர்.

    இது தொடர்பாக குடியிருப்போர் நல சங்க நிர்வாகியான லட்சுமி நாராயணன் கூறும்போது, நில அதிர்வு காரணமாக வீடுகள் குலுங்கவில்லை என்று அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். அப்படியென்றால் கட்டிடத்தில் அதிர்வு ஏற்பட்டது ஏன்? அதற்கான காரணம் என்ன? என்பதை கண்டுபிடித்து விளக்க வேண்டும் என்றார்.

    குடியிருப்பு வாசியான ஜெயபிரகாஷ் கூறும்போது, கட்டிடத்தில் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததும் மாடியில் இருந்து இறங்கி கீழே ஓடி வந்தோம். இங்கு 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருவதால் அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் நில அதிர்வுக்கான காரணத்தை கண்டறிந்து தெளிவு படுத்த வேண்டும் என்றார்.

    அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் வாயு காரணமாக வீட்டில் உள்ள பொருட்கள் துருப்பிடித்து போவதாக அங்கு வசிப்பவர்கள் தெரிவித்தனர். சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் காரணமாக அதிர்வு ஏற்பட்டு உள்ளதா? என்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    கடந்த 2021-ம் ஆண்டு இந்த குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது கட்டிட வல்லுனர்கள் ஆய்வு செய்து அடுத்த 20 ஆண்டுகளுக்கு கட்டிடம் உறுதியாக இருக்கும் என்று தரச் சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் கட்டிடத்தில் ஏற்பட்டுள்ள நில அதிர்வு குடியிருப்பு வாசிகளை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

    • 2019-ம் ஆண்டு தமிழக வீட்டுவசதி வாரிய திட்டத்தின் கீழ் இந்த குடியிருப்பு வழங்கப்பட்டது
    • வழங்கப்பட்ட இரண்டு மாதங்களில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு

    சென்னை கொரட்டூர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென அதிர்வு ஏற்பட்டுள்ளது. சுமார் 20 வினாடிகள் இந்த அதிர்வு உணரப்பட்டதால், அங்கு வசித்தவர்கள் சாலையில் தஞ்சம் அடைந்தனர்.

    கொரட்டூரில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான கோல்டன் பிளாக் என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. 9 தளங்களை கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இன்று அதிகாலை திடீரென கட்டிடம் குலுங்குவதுபோல் உணரப்பட்டதால் அங்கு வசித்தவர்கள், காவல்கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட ஆய்வில் எந்தவித நிலஅதிர்வும் அதிகாரப்பூர்வமாக பதிவாகவில்லை எனத் தெரிவித்தனர்.

    2019-ம் ஆண்டு தமிழக வீட்டுவசதி வாரிய திட்டத்தின் கீழ் இந்த குடியிருப்பு வழங்கப்பட்டதாகவும், சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், கட்டிடம் வழங்கப்பட்ட இரண்டு மாதங்களிலேயே விரிசல் ஏற்பட்டதாகவும்,

    இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு விரிசல்கள் சரி செய்யப்பட்ட நிலையில், அதில் திருப்தியில்லை என்பதால் போராட்டம் நடத்தியதாகவும், அரசு பல்கலைக்கழக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சரி செய்யப்பட்டதாகவும்,

    உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த குடியிருப்பில் வசிப்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும், அரசு தலையிட்டு இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் குடியிருப்புவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

    • தாம்பரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
    • மக்கும் குப்பையை அந்தந்த குடியிருப்பில் வசிப்பவர்களே உரமாக்கி கொள்ளவேண்டும்.

    தாம்பரம்:

    சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. புறநகர் பகுதிகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இதனால் தாம்பரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    இதைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சுமார் 2 லட்சத்து 52 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள். தங்கள் வீட்டு குப்பைகளை தூய்மைப் பணியாளர்களிடம் மொத்தமாக கொடுக்காமல் மக்கும் குப்பை, மக்காத குப்பை 'என்று பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், 50 வீடுகளுக்கு மேல் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பையை அகற்ற தாம்பரம் மாநகராட்சி புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.

    அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் குடியிருப்பில் அமைக்கப்பட்டு உள்ள மறுசுழற்சி சாதனங்களை பயன்படுத்தி திடக்கழிவை சுத்திகரித்து கொள்ளவேண்டும். மேலும் மக்கும் குப்பையை அந்தந்த குடியிருப்பில் வசிப்பவர்களே உரமாக்கி கொள்ளவேண்டும்.

    காகிதம் மற்றும் மக்காத பிளாஸ்டிக், எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகள் மட்டும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதற்கு ஒப்புக்கொள்ளாத குடியிருப்புகளில் குப்பை அள்ள மாநகராட்சி ஊழியர்கள் வரமாட்டார்கள். அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் தனியார் குப்பை அகற்றும் ஏஜென்சி மூலம் அகற்றி கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய உத்தரவு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறும்போம், அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடு வாங்கிய பலருக்கு தாம்பரம் மாநகராட்சி விதித்துள்ள புதிய கட்டுப்பாடு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏற்கனவே திடக்கழிவு மேலாண்மைக்கு வரி வசூலித்து வரும் நிலையில், குப்பையை அந்தந்த குடியிருப்புகளே அகற்ற வேண்டும் என்ற உத்தரவை தாம்பரம் மாநகராட்சி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.

    • திருக்குமரன்நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • விஜயகுமார் எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட திருக்குமரன்நகர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. திருப்பூர் வடக்கு தொகுதி கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு சென்று அங்குள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது பஸ், பள்ளி, தெருவிளக்குகள், ரேஷன்கடை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரு–மாறு பொதுமக்கள் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு வழங்கினர்.

    மனுக்களை பெற்றுக்கொண்ட விஜயகுமார் எம்.எல்.ஏ., அதிகாரிகளிடம் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். இதில் 5-வது வார்டு கவுன்சிலர் இந்திராணி ஆனந்தன், அ.தி.மு.க. வட்ட செயலாளர் நாச்சிமுத்து, பகுதி துணை செயலாளர் மூர்த்தி, நிர்வாகிகள் ஜீவானந்தம், சிவராமன், பிரபாகர், சத்தியராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    • 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி கட்டடம் 35 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது.
    • குடியிருப்பு ஒன்றுக்கு தற்போது 1.66 லட்சம் ரூபாய் என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    பல்லடத்தை அடுத்த பெரும்பாளியில் 432 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் 35 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருகிறது.கடந்த 2019ம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு க்கான கட்டுமான பணிகள் துவங்கின. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் நிறைவடையவுள்ள சூழலில் பயனாளிகள் யார், எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

    வீட்டு வசதி வாரிய அதிகாரிஒருவர் கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் 60 சதவீதம்வரை நிறைவடைந்துள்ளது.இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முழுமையாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்க ப்படும். மொத்தமுள்ள 432 குடியிருப்புகளுக்கு, நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் ஏற்க னவே பெறப்பட்டுள்ளன. குடியிருப்பு ஒன்றுக்கு தற்போது 1.66 லட்சம் ரூபாய் என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வரும் சூழலில் கலெக்டர் உத்தர வின்படி பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

    • அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வேண்டி எராளமான பொதுமக்கள் மனு செய்து வீடுகள் பெற்றுள்ளனர்.
    • வீடு கிடைக்கப்பெறாத மக்களின் மனுக்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., க.செல்வராஜ் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திருப்பூர் மாநகர பகுதிகளில் அமைந்துள்ள நகர்புற வாழ்விட மேம்பாட்டுவாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வேண்டி எராளமான பொதுமக்கள்மனு செய்து வீடுகள் பெற்றுள்ளனர். அரசுக்கும் பொது மக்களிடையே நல்லவரவேற்பு கிடைத்துள்ளது.

    வீடு கிடைக்கப்பெறாத மக்களின் மனுக்கள்காத்திருப்போர் பட்டியலில் உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில்என்னிடம் வரப்பெற்ற மனுக்களை தங்களுக்கு பரிந்துரைத்தேன். அதற்குதாங்களும் ஒப்புதல் அளித்து குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்துள்ளீர்கள். அதில்ஒரு சிலர் உள்வாடகை மற்றும் போக்கியத்துக்கு விட்டு தகுதியானவர்களுக்குவீடு கிடைக்காத நிலையை ஏற்படுத்தி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர் என்று தெரிய வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்களை கண்டறிந்து அப்புறப்படுத்தி காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியான பயனாளிகளுக்கு அந்த குடியிருப்பு கிடைத்திட தாங்கள் நடவடிக்கை எடுத்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

    • வெல்ஸ்பன் குழுமம் அடுக்குமாடி குடியிருப்பை ரூ.240 கோடிக்கு வாங்கி உள்ளதாக தெரிகிறது.
    • இந்தியாவிலேயே இன்று வரை விற்பனையான குடியிருப்புகளில் மும்பை 360 வெஸ்ட் அடுக்குமாடி குடியிருப்பு தான் அதிக விலைக்கு விற்பனை ஆன குடியிருப்பு என்று கூறப்படுகிறது.

    மும்பை:

    மும்பையின் ஓர்லி பகுதியில் தொழில் அதிபர்கள் வசிக்கும் சொகுசு பங்களாக்கள் உள்ளன.

    இங்குள்ள மும்பை 360 வெஸ்ட் அடுக்குமாடி குடியிருப்பு மிகவும் பிரபலமானது. சமீபத்தில் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி விற்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியானது.

    இதனை வெல்ஸ்பன் குழுமத்தின் தலைவர் பி.கே.கோயங்கா விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    வெல்ஸ்பன் குழுமம் இந்த குடியிருப்பை ரூ.240 கோடிக்கு வாங்கி உள்ளதாக தெரிகிறது. அதன்படி இந்தியாவிலேயே இன்று வரை விற்பனையான குடியிருப்புகளில் இந்த குடியிருப்பு தான் அதிக விலைக்கு விற்பனை ஆன குடியிருப்பு என்று கூறப்படுகிறது.

    அடுக்குமாடி குடியிருப்பின் கோபுரத்தில் 3 தளங்களில் பென்ட் ஹவுஸ் அமைந்துள்ளது. சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள இக்குடியிருப்பினை ரூ.240 கோடிக்கு வெல்ஸ்பன் குழுமம் வாங்கி உள்ளது. இனி இந்த தளத்தில்தான் இக்குழுமம் தங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ×